ஊழல் குற்றச்சாட்டு: சிறையிலடைக்கப்பட்டார் முன்னாள் ராணுவ அதிகாரி!

Tuesday, July 26th, 2016

 

சீனாவின் ராணுவ நீதிமன்றம் ஒன்று முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரை ஊழல் குற்றச்சாட்டிற்காக சிறையில் அடைத்துள்ளது.

2012 ஆம் ஆண்டு பதவி இறங்கும்வரை குவோ போசியாங், வலுவான மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தார். இவ்வாண்டு தொடக்கத்தில், ராணுவ உயர் பதவி அளிப்பதற்கு கைமாறாக 12 மில்லியன் டாலர் கையூட்டு பெற்றதாக அவர் ஒப்பு கொண்டார்.

சீனாவின் அதிபர் சி ஜீன்பிங் சீன ராணுவத்தை சீரமைக்க தொடங்கி, தனக்கு விசுவாசமானவர்களை புதிய மூத்த அலுவலர்களாக அமர்த்தியதால், குவோ மீதான குற்றச்சாட்டு விசாரணக்கு வந்தது.

Related posts: