உக்ரைன் போரில் திடீர் திருப்பம் – இரண்டு அமெரிக்கர்களை சிறை பிடித்தது ரஷ்யா!

Thursday, June 16th, 2022

உக்ரைனில் இரண்டு பிரித்தானியர்கள் போரில் ஈடுபட்டதாகத் தெரிவித்து ரஷ்ய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டு அமெரிக்கர்களும் யுத்த களத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமெரிக்கப் படைவீரர்களான 39 வயதான அலெக்சாண்டர் ட்ரூக் மற்றும் 28 வயதான ஆண்டி ஹுய்ன் ஆகியோரே உக்ரைனில் மோலின்போது சிறைபிடிக்கப்பட்டதாக தி டெலிகிராப் தெரிவித்துள்ளது.

இந்த தகவல் உறுதிசெய்யப்பட்டால், போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய போர்க் கைதிகளாக மாறிய முதல் அமெரிக்கப் படைவீரர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வியாழன் அன்று கார்கிவ் அருகே உள்ள இஸ்பிட்ஸ்கே கிராமத்தில் நடந்த ஒரு போரில் குறித்த இருவரும் சிறைபிடிக்கப்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத அவர்களின் நண்பர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

போரின் போது இருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் கூறினார், எனினும், பின்னர் மேற்கொண்ட தேடுதலின் போது அவர்களின் உடல்கள் அல்லது அவர்களின் உபகரணங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், கார்கிவ் அருகே இரண்டு அமெரிக்கப் படைவீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டதாக ரஷ்ய டெலிகிராம் சனலில் ஒரு செய்தி வெளியான போது அவரது சந்தேகம் பின்னர் அதிகரித்ததாக கூறப்படுகின்றது.

அலபாமாவைச் சேர்ந்த ட்ரூக் அமெரிக்க இராணுவத்தில் இணைந்துகொண்டதுடன், ஈராக்கில் ஒரு ஸ்டாஃப் சார்ஜெண்டாக பணியாற்றினார். வியட்நாம் பெற்றோருக்குப் பிறந்த ஹுய்ன், அலபாமாவில் வசித்து, கல்லூரியில் ரோபோட்டிக்ஸ் படித்து வந்தார். அவர் முன்னர் அமெரிக்க கடற்படையில் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். எனினும் போர் அனுபவம் இல்லை என கூறப்படுகின்றது

000

Related posts: