ஈக்வேடாரில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Thursday, April 21st, 2016
தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையோர நகரமான ஈக்வேடர் நாட்டை கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து தாக்கிய இரு நிலநடுக்கங்களால் பலியானவர்களின் எண்ணிக்கை 507 ஆக உயர்ந்துள்ள நிலையில்  நேற்று  பிற்பகல் அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 507 ஆக உயர்ந்துள்ளது.  2,500 க்கும்  அதிகமானவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், நேற்று பிற்பகல் ஈக்வேடாரில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டராக பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts: