இஸ்ரேலில் தீவிரவாத தாக்குதல்: நான்கு பேர் பலி!

Monday, January 9th, 2017

இஸ்ரேலில் தீவிரவாதி என சந்தேகிக்கப்பட்ட ஒருவர், பாதுகாப்பு படை குழுவினர் மீது பாரஊர்தியை ஏற்றி இடித்ததை தொடர்ந்து சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இச்சம்பவத்தில் குறைந்தது 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ”மோசமான தாக்குதல் என்றும், இது ஒரு தீவிரவாத தாக்குதல் என்றும்,” இஸ்ரேல் வானொலியில் போலீஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் நடைபெற்ற போது உடல்கள் தெருவில் தூக்கியெறியப்பட்டதாக இஸ்ரேல் வானொலி தெரிவித்துள்ளது.

ஜெருசலத்தின் பழைய நகரின் சுவர்களை கவனிக்கும் வகையில் அமைந்திருக்கும் பிரபலமான சாலையில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் இந்த தாக்குதல் தொடர்புடைய புகைப்படங்களில், ஒரு லாரியின் முகப்பு கண்ணாடியில் பல தோட்டாக்கள் பாய்ந்துள்ளன.

_93315234_77bac74e-5fd6-4b48-9a2c-a664e5eaf492

Related posts: