இந்தோ பசுபிக்கில் தற்போது மோதல் இடம்பெறுவதற்கான அதிக ஆபத்துள்ளது – அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் எச்சரிக்கை!
Wednesday, September 20th, 2023இந்தோ பசுபிக்கில் முன்னர் எப்போதையும் விட தற்போது மோதல் இடம்பெறுவதற்கான அதிக ஆபத்துள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார்.
பல வருடங்களிற்கு முன்னர் காணப்பட்டதை விட பிராந்தியத்தில் மோதலிற்கான அதிக ஆபத்து காணப்படுகின்றது எனஅவர் தெரிவித்துள்ளார்.
சிஎன்என்னின் கிறிஸ்டியனே அமன்பூருக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உலகம் பல வருடங்களாக பார்த்திராத ஆபத்தான மூலோபாய சூழ்நிலைகள் காணப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எந்த நாடும் ஆக்கிரமிக்காத எந்த நாடும் ஆக்கிரமிக்கப்படாத நிலையை உருவாக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ரோனு தாக்கி வங்கதேசத்தில் 17 பேர் பலி!
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்!
கடன் பிரச்சினையை தீர்க்க வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணிந்து செல்ல வேண்டிய தேவை இலங்கைக்கு கிடையாது - ...
|
|