இந்தோ பசுபிக்கில் தற்போது மோதல் இடம்பெறுவதற்கான அதிக ஆபத்துள்ளது – அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் எச்சரிக்கை!
Wednesday, September 20th, 2023
இந்தோ பசுபிக்கில் முன்னர் எப்போதையும் விட தற்போது மோதல் இடம்பெறுவதற்கான அதிக ஆபத்துள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார்.
பல வருடங்களிற்கு முன்னர் காணப்பட்டதை விட பிராந்தியத்தில் மோதலிற்கான அதிக ஆபத்து காணப்படுகின்றது எனஅவர் தெரிவித்துள்ளார்.
சிஎன்என்னின் கிறிஸ்டியனே அமன்பூருக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உலகம் பல வருடங்களாக பார்த்திராத ஆபத்தான மூலோபாய சூழ்நிலைகள் காணப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எந்த நாடும் ஆக்கிரமிக்காத எந்த நாடும் ஆக்கிரமிக்கப்படாத நிலையை உருவாக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
661 இலங்கையர்கள் ஐரோப்பிய நாடுகளில் பலி!.
சீன ஜனாதிபதி வடகொரியாவிற்குப் பயணம்?
தகவல்கள் உறுதி செய்யும் திகதி ஏப்ரல் 10 வரை நீடிப்பு - 37 இலட்சம் படிவங்களில் 27 இலட்சத்து 58 ஆயிரத்...
|
|
|


