இந்தோனோசியாவில் இருந்து புறப்பட்டுச் விமானம் விபத்து?
Monday, October 29th, 2018இந்தோனோசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று(29) காலை 6.33 மணிக்கு புறப்பட்டுச் சென்ற JT610 என்ற பயணிகள் விமானம், புறப்பட்ட 13-வது நிமிடத்தில் விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விமானமானது, ஜகார்தாவில் இருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு புறப்பட்ட லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமானது ஆகும். தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், விமானத்தை தேடி வருகிறோம் என இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்த நிலையில் அது கடலில் விழுந்துள்ளது என ஊடக பேச்சாளர் லதீப் யூசுப் தெரிவித்துள்ளார்.
விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
68 ஆவது உலக அழகியாக மெக்சிகோவின் வனேசா தெரிவு!
ஆபத்தான போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
திங்கள்முதல் தனியார் தொழில்துறைகளை ஆரம்பிக்க இணக்கம் - அமைச்சர் தினேஷ் குணவர்தன!
|
|