இந்தோனேசியா – சுலவேசி தீவில் உள்ள தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு – 11 பேர் உயிரிழப்பு!
Tuesday, July 9th, 2024
இந்தோனேசியா – சுலவேசி தீவில் உள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 11 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன் நிலச்சரிவில் சிக்கி 45 பேர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அங்குப் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நிலச்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களைத் தேடி மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலட்சக்கணக்கான வெளிநாட்டினருக்கு குடியுரிமை அளிக்க உறுதி! - ஹிலாரி
ஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் 72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனம் அறிவிப்பு!
சிறார்களை துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு - ஹங்கேரிய ஜனாதிபதி ராஜினாமா!
|
|
|


