இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி தமிழக முதல்வர் கடிதம்!
Friday, March 3rd, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி, இந்திய பிரதமர் நரேந்திரே மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கை கடற்பரப்பில் வைத்து 13 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்படி தற்போது இலங்கையில் 48 தமிழக கடற்றொழிலாளர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் 122 படகுகளும் தடுப்பில் உள்ளன. இந்த நிலையில் மீனவர்களும், அவர்களின் படகுகளும் உடனடியாக விடுவிக்கப்படுவதற்கான ராஜதந்திர செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அவர் தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாதிருக்கின்றமை தொடர்பில் பெரும் அதிருப்தி கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
ஆஸ்திரேலியவில் தொங்கு நாடாளுமன்றம் அமையும் சாத்தியம்!
கணினி வலையமைப்பு ஊடுருவலால் யாஹூவில் ஒரு பில்லியன் பேர் பாதிப்பு!
அதிகளவு குழந்தைகள் பலிகொடுப்பு - தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்!
|
|