இத்தாலி அருகே அகதிகள் படகு கடலில் மூழ்கியது : 100 பேர் பலியாகியிருக்கலாம் என அச்சம்!
Monday, January 16th, 2017மத்தியதரைக்கடலில் லிபியாவிற்கும் இத்தாலிக்கும் இடையே 50 கிலோ மீட்டர் தொலைவில் லிபியாவில் இருந்து அகதிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியதில் சுமார் 100 பேர் பலியாகி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் பிரான்ஸ் கடற்படைக் கப்பலும், இரண்டு வர்த்தகக் கப்பல்களும் விமானங்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டன.
ஆனால், நான்கு பேரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்துள்ளது. 8 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். விபத்திற்குள்ளான படகில் ஏராளமானவர்கள் பயணம் செய்துள்ளதால் 100 க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கிப் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. படகில் பயணித்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் இல்லை.
Related posts:
நேபாளத்தில் 54 பேர் பலி!
இந்தியாவில் புதிய ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம்!
ட்ரம்ப் – புடின் கலந்துரையாடல்
|
|