இது எனது இறுதி உரையாகக்கூட இருக்கலாம்’ – பிடெல் கெஸ்ட்ரோ!
Friday, April 22nd, 2016‘இதுவே என் கடைசி உரையாகக்கூட இருக்கலாம்’. இலத்தீன் அமெரிக்க நண்பர்களுக்கும் பிற நாட்டு நண்பர்களுக்கும் கியூப மக்கள் எப்போதும் வெற்றியாளர்களே என்ற செய்தியை தெரிவிக்க வேண்டும்” என கியூப முன்னாள் ஜனாதிபதி பிடெல் கெஸ்ட்ரோ தனது உரையில் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை கியூப காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பை 84 வயதான ராவுல் கெஸ்ட்ரோவிடம் ஒப்படைப்பது என்ற முடிவை எடுத்தது.
முக்கிய முடிவு எட்டப்பட்ட அந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்து தலைநகர் ஹவானாவிலுள்ள பாரம்பரிய அரங்கில் பிடெல் கெஸ்ட்ரோ உரையாற்றினார்.
இதன்போது அவர் தெரிவித்துள்ளதாவது, இதுவே என் கடைசி உரையாகக் கூட இருக்கலாம். இலத்தீன் அமெரிக்க நண்பர்களுக்கும் பிற நாட்டு நண்பர்களுக்கும் கியூப மக்கள் எப்போதும் வெற்றியாளர்களே என்ற செய்தியை தெரிவிக்க வேண்டும்.
நான் விரைவில் 90 வயதை தொட்டு விடுவேன். அதன்பின்னர் நானும் மற்ற வயோதிபர்களைப் போலவே இருப்பேன். காலம் என்னை மறையச் செய்யும். ஆனால், கியூபாவின் கம்யூனிஸ்ட்கள் இந்த புவியில் ஒரு சிறந்த உதாரணமாக திகழ்வர்.
கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை உத்வேகத்துடன் அதற்குண்டான உரிய மரியாதையுடனும் பின்பற்றினால் மனித குலத்திற்கு ஆகச் சிறந்த பொருளாதார, கலாசார நன்மைகளைச் செய்ய முடியும் என்பதை உணர்த்தலாம். நமது கோட்பாடுகளை நிலைநிறுத்த சமரசமின்றி போராட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|