அமெரிக்காவில் தீ விபத்து – 4 பேர் பரிதாபப் பலி!

Thursday, December 27th, 2018

அமெரிக்காவின் மெம்ஃபிஸ் மாநகர் அருகே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது நிகழ்ந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்திய சிறுவர், சிறுமியர் 3 பேர் மற்றும் ஒரு அமெரிக்கப் பெண் ஆகியோர் பலியாகினர்.

மெம்ஃபிஸ் புறநகர் பகுதியில் உள்ள கோலியர்வில் தேவாலயத்தின் நிதியுதவியுடன் தெலுங்கானாவில் நாயக் என்பவரது குடும்பம் கிறிஸ்தவ மதப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் கோலியர்வில் தேவாலயத்தின் உறுப்பினரான காரி கோத்ரியத்துடன் நட்பு ஏற்பட்டது.

இந்நிலையில், நாயக்கின் பிள்ளைகளான ஷாரோன்(17), ஜாய்(15), ஆரோன்(14) ஆகிய மூவரும் மிசிசிப்ஃபி நகரில் உள்ள பிரெஞ்சு பள்ளியில் பயின்று வந்தனர். அங்கு குளிர்கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இந்தியா வந்து திரும்புவது சிக்கலாக இருக்கும் என்பதால் பிள்ளைகள் மூவரையும் காரி கோத்ரியத்தின் வீட்டில் தங்குவதற்கு நாயக் அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் கடந்த 22 ஆம் திகதி கோத்ரியத்தின் வீட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. கோத்ரியத்தின் கணவர் டேனி, அவர்களது மகன் கோல் ஆகியோர் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறியதால் உயிர் தப்பினர்.

சிறுவர், சிறுமியர் மூவரும், அமெரிக்கப் பெண்ணும் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related posts: