அத்துமீறி நுழையும் கப்பல்களை தாக்குவோம்: வட கொரியா எச்சரிக்கை
Sunday, May 29th, 2016
தென் கொரியா – வட கொரியா இடையே உள்ள சர்ச்சைக்குரிய கடல் எல்லையில், தென் பகுதியிலிருந்து நுழையும் கப்பல்கள் சுட்டு வீழ்த்தப்படும் என வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் கொரிய கடற்படை தங்கள் எல்லைப் பகுதிக்குள் நுழைந்த இரு கப்பல்களை நோக்கி எச்சரிக்கை குண்டுகளை சுட்ட சம்பவத்திற்குப் பிறகு வட கொரியாவின் இந்த எச்சரிக்கை வெளிவந்துள்ளது.
இந்த சம்பவத்தை பதற்றத்தை அதிகரிக்கும் முயற்சியிலான இராணுவ ஆக்கிரமித்தல் என்று வட கொரியா வர்ணித்துள்ளது.
இதற்குமுன், பேச்சு வார்த்தைக்கு அழைத்த வட கொரியாவின் அழைப்பை தென் கொரியா மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அணு ஆயுத திட்டங்களை முதலில் வட கொரியா கைவிட வேண்டும் என தென் கொரியா கூறியுள்ளது.
Related posts:
உளவாளிகள் பற்றிய தகவல்களை வழங்குவோருக்கு பணப் பரிசு வழங்கும் சீனா!
இந்திய உளவுத்துறை எச்சரிக்கை..!
ஆலயங்கள் மத வழிபாட்டுத்தளங்கள் திறப்பு!
|
|