அதிரடி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள ட்ரம்ப்…!

Wednesday, January 25th, 2017

வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியை குறைக்கும் ஆவணங்களில் அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டிரம்ப், நாட்டின் நிதி திட்டமிடல்கள் தொடர்பான பரிசீலனைகளை மேற்கொண்ட நிலையிலேயே குறித்த ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதல் டிரம்ப் பல்வேறு திட்டங்களுக்கு தடையை ஏற்படுத்தியிருந்தார். அதில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா அறிமுகப்படுத்திய மருத்துவ காப்பீடு திட்டமே முதலாவது தடை உத்தரவை பெற்றது.

மேலும் சீனாவை புறக்கணித்து ஜப்பான், கனடா, மெக்ஸிகோ, அவுஸ்திரேலியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை கொண்டு ஒபாமா அறிமுகப்படுத்தியிருந்த டிரான்ஸ் பசிபிக் கூட்டு ஒப்பந்தத்தையும் டிரம்ப் தற்போது திரும்ப பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது அமெரிக்க தொண்டு நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பாரிய நிதியை குறைக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தென் சீனக் கடலுக்கு சொந்தம் கொண்டாடும் விவகாரத்தில் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கைவிடுத்துள்ளது.

தென் சீனக் கடலை நீண்ட நாட்களாக சொந்தம் கொண்டாடி வரும் சீனாவுக்கும் பிலிப்பைனஸ், மலேசியா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தலையிட்ட அமெரிக்காவை ”தென் சீனக் கடலில் தங்களுக்கும், பிற நாடுகளுக்கும் இடையே நிலவும் பிரச்சினையில் அமெரிக்கா தலையிட வேண்டாம்” என சீனா எச்சரித்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

இதனையடுத்து, தென் சீனக் கடல் விவகாரத்தில் முட்டுக்கட்டை ஏற்படுத்தினால் போருக்குத் தயாராக இருக்குமாறு அமெரிக்காவுக்கு சீனா கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆனால், தென் சீனக் கடல் சர்வதேச செயல்பாடுகளுக்கு உரிய பகுதி என்றும், அதற்கு சீனா சொந்தம் கொண்டாட முடியாது என்றும் அமெரிக்கா மீண்டும் எச்சரித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர் பேசும்போது, “தென் சீனக் கடல் என்னைப் பொறுத்தவரை சர்வதேச செயல்பாடுகளுக்கு உரியது என்றே நான் நினைக்கிறேன்.

அதனை சீனா சொந்தம் கொண்டாட முடியாது. தொடர்ந்து அமெரிக்க தென் சீனக்கடல் பாதுகாப்பை உறுதி செய்யும்” என்று கூறினார்.

இந்நிலையில், தென் சீனக் கடலுக்கு சொந்தம் கொண்டாடும் விவகாரத்தில் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என்று அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கைவிடுத்துள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறுகையில், ”தென் சீனக்கடலில் சீனா தனது இறையான்மையை நிலைநாட்டியே தீரும். தங்களது உரிமைகளையும், நலன்களையும் உறுதி செய்யும்” என குறிப்பிட்டுள்ளார்.

coltkn-01-25-fr-03162418595_5175949_24012017_MSS_CMY

Related posts: