அதிபர் மாளிகை அருகே கார் குண்டுவெடிப்பு – 11 பேர் பலி!

Monday, June 17th, 2019

சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே இடம்பெற்ற கார்குண்டுவெடிப்பில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சோமாலியாவில் அல்-கொய்தாவின் ஆதரவுபெற்ற அல்-ஷபாப் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்கள் அங்கு பொலிசார் பாதுகாப்புபடை வீரர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

குண்டுவெடிப்பில் சிக்கி 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளதுடன், மேலும் 25 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

குண்டுவெடிப்பு நடந்த சில மணி நேரத்துக்குள்ளாக மொகாதீசுவில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு செல்லும் சாலையில் மற்றொரு கார் வெடிகுண்டு வெடித்தது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இரட்டை கார் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு அல்-ஷபாப் பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts: