அசர்பய்ஜான் தலைநகரில் பாரிய தீப்பரவல் காரணமாக 25 பேர் பலி!

Sunday, March 4th, 2018

அசர்பய்ஜான் (Azerbaijan) தலைநகர் பாக்குவில் (Baku) ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 4 பேர்  கடும் காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீப்பரவலானது போதைவஸ்து பாவனையாளர்களை புனருதாரனம் மேற்கொள்ளப்படும் நிலையத்தில் இடம்பெற்றதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கான காரணம்இதுவரையில் வெளியாகவில்லை.

Related posts: