அகதிகளுக்கு அமெரிக்கா அளிக்கும் மகிழ்ச்சியான பரிசு!

Tuesday, November 15th, 2016

அகதியாக புலம்பெயர்ந்து பப்புவா நியுகினி மற்றும் நவுறு போன்ற தீவுகளில் உள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நியாயமான அகதிகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் என அந்நாடு அறிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி கருத்து வெளியிடுகையில் –

அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இது தொடர்பிலான ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் நிர்வாகத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட அகதிகளுக்கான திட்டத்தில் பப்புவா நியுகினி மற்றும் நவுறு போன்ற தீவுகளில் உள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகளை அமெரிக்கா பொறுப்பேற்க தீர்மானித்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய டொனால்ட் டரம்ப இதனை ஏற்றுக்கொள்வாரா? என்ற கேள்வியெழுந்திருந்த நிலையில், குறித்த திட்டம் அமுல்படுத்தப்படும் என ஜோன் கெரி தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படையாக கருத்து வெளியிட்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

john-kerry2366

Related posts: