I.P.L. தொடர்: இறுதிக்கு சென்றது சென்னை!

Wednesday, May 23rd, 2018

இந்தியன் பிரீமியர் லீக்- 2018 தொடரின் ‘தகுதிச் சுற்று 1’போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று(22) இரவு .007 மணிக்கு தொடங்கியது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவர் எம்.எஸ். டோனி நாணயசுழற்சியை வென்று களத்தடுப்பை தேர்வு செய்தார். சன்சைரைசர்ஸ் அணி 20 ஓவர் நிறைவில் 07 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்கள் பெற்றது.

இதையடுத்து, சென்னை அணி 140 ஓட்டங்களை இலக்காக கொண்டு களமிறங்கியது. பரபரப்பான போட்டியில் சென்னை அணி 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 140 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது

Related posts: