வெற்றி பெற தோல்வி தேவை -யுவராஜ் சிங்!

Thursday, December 7th, 2017

கடந்த 17 வருடமாக நான் தோல்வி அடைந்து கொண்டே இருக்கிறேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் குறிப்பிட்டுள்ளார்.

தோல்விகளைக் கண்டு நான் பயப்படவில்லை. வாழ்க்கையில் மேடு பள்ளங்களை சந்தித்தவன் தான் நான். வெற்றி பெற வேண்டுமென்றால் முதலில் தோல்வி அடைய வேண்டும். “நீங்கள் வெற்றிபெற்ற மனிதராக இருக்க வேண்டுமென்றால் முதலில் தோற்கடிக்கப்பட வேண்டும்” அதுதான் உங்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும்.

நான் இப்போதும் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கின்றேன். அடுத்து எந்தவிதமான போட்டியில் விளையாடப் போகிறேன் என்று தெரியவில்லை.

வயதாகிக் கொண்டிருப்பதால் என்னை கடுமையான பயிற்சிக்கு உட்படுத்திக் கொண்டே இருக்கிறேன்.

2019 உலகக் கிண்ண கிரிக்கெட் வரை விளையாடுவேன் என்றும் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்வாளர்களால் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படும் யுவி, சம்பியன்ஸ் கிண்ண தொடருக்குப் பின்னர் அணிக்கு தேர்வாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: