ரோஹித் சர்மா எதிர்காலத்தில் டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை – பிசிசிஐ வட்டாரங்கள் தகவல்!

Thursday, November 23rd, 2023

இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா எதிர்காலத்தில் டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் தலைவர் ரோஹித் சர்மா இனி டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடாதிருக்க பிசிசிஐ உடன் ஆலோசனைகளை நடத்தியுள்ளார்.

50 ஓவர் உலகக் கிண்ண தொடங்குவதற்கு முன்பு தனது எதிர்காலம் குறித்து பிசிசிஐ உடன் ரோஹித் சர்மா ஆலாசனை நடத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்தியா அணி அரையிறுதியில் வெளியேறியதிலிருந்து ரோஹித் சர்மா ஒரு டி2 ஆட்டத்தில் கூட விளையாடவில்லை. ஹர்திக் பாண்டியா டி20 அணி அணியை வழிநடத்தியுள்ளார்.

36 வயதான இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா 148 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், நான்கு சதங்களுடன் கிட்டத்தட்ட 140 ஸ்ட்ரைக் ரேட்டில் 3853 ஓட்டங்களை குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் கூற்றுப்படி கட்டணத்தை உடனடியாக குறைக்க முடியாது - மின்சாரக் கட்டணத்த...
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் 90...
யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள்விமானப்படையில் இணைய முன்வரவேண்டும் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிர...