ரொனால்டோ அடித்த கோல் : நடுவரின் தவறான முடிவா?
Thursday, March 2nd, 2017
லா லிகா கால்பந்து தொடரில் வில்லாரியல் அணிக்கு எதிரான போட்டியில் ரியல் மாட்ரிக் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கொடுத்ததால் தான் அந்த அணி முதல் இடத்தில் உள்ளது என்பதற்கு அணியின் பயிற்சியாளர் ஷினேடின் ஷிடேன் ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டில் லா லிகா என்ற முக்கியமான கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் போன்ற முன்னணி அணிகள் உள்ளன. நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணியும் – வில்லாரியல் அணியும் மோதின. பரபரப்பாக சென்ற இப்போட்டியில் வில்லாரியல் அணி 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. அதன்பின் ரியல் மாட்ரிட் அணி ஒரு கோல் அடித்தது.
இதனால் 2-1 என்ற கணக்கில் வில்லாரியல் அணி முன்னிலையில் இருந்தது. அப்போது வில்லாரியல் அணியின் புருனோ சோரியானோவின் கையில் பந்து பட்டதாக நடுவர் பெனால்டி வாய்ப்பு கொடுத்தார்.
ஆனால் இதற்கு வில்லாரியல் அணி வீரர்கள் இல்லை என்று மறுப்பு தெரிவித்தும் நடுவர் தன் முடிவில் எந்த ஒரு மாற்றமும் செய்யவில்லை.
இந்த பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட ரொனால்டோ அருமையாக கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 2-2 என சமநிலையடைந்தது. அதன்பின் ரியல் மாட்ரிட் மேலும் ஒரு கோல் அடித்து 3-2 என அசத்தல் வெற்றி பெற்றது.
இதற்கு வில்லாரியல் அணியின் தலைவர் நடுவரின் பெனால்டி வாய்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதனால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் நடுவரின் முடிவால்தான் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்று லா லிகா புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கும் பார்சிலோனா அணியின் பின்கள வீரர் ஜெரார்டு பிக்யூ, நடுவர்கள் சர்ச்சைக்குரிய முடிவுகளால் ரியல் மாட்ரிட் கூடுதலாக 8 புள்ளிகள் பெற்றுள்ளது என்று டுவிட் செய்திருந்தார்.
Related posts:
|
|