ரங்கன ஹேரத் விளையாடுவது சந்தேகம்!

Tuesday, August 1st, 2017

வரும் வியாழக்கிழமை எஸ்.எஸ்.சி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட்போட்டியில் ரங்கன ஹேரத் கலந்து கொள்வது நிச்சயமற்று காணப்படுகிறது.

அவரின் உடல் நிலை குறித்து எதிர்வரும் இரண்டு தினங்களுள் அவதானம் செலுத்தவுள்ளதாக இலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க குறிப்பிட்டுள்ளார்.இறுதி நேரம் வரை ரங்கன ஹேரத்தை போட்டியில் கலந்து கொள்ள வைக்க முயற்சி எடுக்கவுள்ளதாக அவர் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, காய்ச்சல் காரணமாக காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியை இழந்த இலங்கை டெஸ்ட் அணியின் புதிய தலைவர் தினேஸ் சந்திமால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: