ரகர் போட்டியில் கண்டி அணி அபார வெற்றி!

Thursday, November 10th, 2016

முதற்தரக் கழகங்களுக்கிடையிலான டய​லொக் கிண்ண றகர் போட்டிப் பருவம் ஆரம்பித்துள்ளதுடன் நடப்பு வருடச் சம்பியனான பிரபல கண்டி விளையாட்டுக்கழகம் தனது இவ்வருட முதற் போட்டியில் சீ.எச் அணியை வெற்றிகண்டுள்ளது.

கண்டியில் இடம்பெற்ற போட்டியின் ஆரம்பம் முதலே கண்டி அணி தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தி இருந்தது. போட்டி முடிவில் மொத்தம் 96 புள்ளகளைப் பெற்றது மட்டு மல்லாது எதிரணியான சீ.எச். அணியை துவம்சம் செய்து எந்த ஒரு புள்ளியையும் விட்டுக் கொடுக்க வில்லை. இதனால் 96 – 00 என்ற அடிப்படையில் புள்ளிகள் பதிவாகியுள்ளன.

கண்டி அணியானது 14 ட்ரைகளைப் பெற்றதன் மூலம் மேற்படி 96 புள்ளிகளுக்கும் பதிவு செய்தது. இதில் 13 ட்ரைகளுக்கான மேலதிகப்புள்ளிகள் பெறப்பட்டன.

போட்டி ஆரம்பத்திலே ரொசான் வீரரத்ன வைத்த ட்ரையை அர்சத் ஜமால்தீன் கோலாக மாற்றி 7-0 என்ற நிலையில் போட்டி ஆரம்பமானது. தோடர்ந்து அர்சத் ஜமால் தீன் மற்றும் திலின விஜேசிங்க ஆகிய இருவரும் தமக்கக் கிடைத்த சகல சந்தர்பங்களையும் பயன் படுத்தி மேலதிகப் புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்தனர். ஆனால் ஒரு சந்தர்பத்தில் மட்டும் அர்சத் ஜமால்தீனால் மேலதிகப் புள்ளி தவற விடப்பட்டது. இதனால் 14 ட்ரகளில் 13 ட்ரைகளுக்கான மேலதிகப் புள்ளிகள் பெறப்பட்டன.

இடைவேளையின் போது கண்டி அணியின் புள்ளிகள் 54-00 என்ற நிலையில் காணப்பட்டது. கண்டி சார்பாக தனுஷ்க ரஞ்சன் 4 ட்ரைகளையும், ரிச்சட் தர்மபால 2 ட்ரைகளையும் பெற்றுக் கொடுத்ததுடன் ஏனைய வீரர்களான யுசுரு அந்தோனி, அர்சத் ஜமால்தீன், ரோசான் வீரரத்ன, ஹசித ஜயவர்தன, தரிந்து சதுரங்க. காஞ்சனா ராமநாயக்க, யாகூப் அலி ஆகியோர்களும் ட்ரைகளைப் பெற்றனர்.

61col161115712_4991052_07112016_aff_cmy

Related posts: