மேத்யூஸ் இருக்கும் வரை எனக்கு அணியில் இடமில்லை –தில்ஹார!
Saturday, September 24th, 2016இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரராக ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடிய தில்ஹார லொக்கு ஹெட்டிகே (Dilhara lokuhettige) ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.
மேற்குறித்த தீர்மானத்தினை நேற்றையதினம்(23) கொழும்பு, முவர்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது உத்தியோகபூர்வமாக அவர் தெரிவித்திருந்தார். அதில் அவர் கூறுகையில், “ஏஞ்சலோ மேத்யூஸ் அணிக்கு தலைவராக இருக்கும் வரையில் என்னை ஓரங்கட்டியே பார்க்கின்றனர், அவரது தலைமை இருக்கும் வரை நான் அணிக்கு செல்லாக் காசாகவே இருக்கின்றேன். எனக்கு அவுஸ்திரேலியாவிடமிருந்தும் அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது .ஓரங்கட்டப்படும் போது நாமாய் தலைகுனிவதை விட எனது முடிவு சிறந்ததென்றே நான் கருதுகிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஹொட்டல் அறையில் இளம்பெண்: சிக்னார் பாகிஸ்தான் வீரர்!
அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி!
ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார் இந்தியாவின் மிதாலிராஜ்
|
|