முதியோர்களுக்கான விளையாட்டு விழா!

Monday, October 17th, 2016

கிளிநொச்சி மாவட்ட சமூகசேவைகள் அலுவலகத்தால் முதியோர்களுக்கான விளையாட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை மாவட்ட கூட்டுறவாளார் மண்டப வளாகத்தில் நடத்தப்பட்டது.

கரைச்சி, கண்டவாளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டபோட்டிகளில் முதல் 3 இடத்தைப் பெற்றவர்களிடையே மாவட்ட மட்டப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களது விபரங்கள் வருமாறு

ஆண்களுக்கான பலூன் ஊதி உடைத்தல் – 1ஆம் இடம் வைத்திய நாகரட்ணம், 2ஆம் இடம் சின்னராசா மனோகரன், 3ஆம் இடம் அருவர் -சண்முகநாதன் விஜயபாலன், நாகமணி மகேந்திரன். ஆண்களுக்கான வேகநடை – 1ஆம் இடம் நாகமணி மகேந்திரன், 2ஆம் இடம் அப்புத்துரை ரகுபதி, 3ஆம் இடம் சின்னராசா மனோகரன், பெண்களுக்கான கிடுகு பின்னுதல் – 1ஆம் இடம் திருமதி மஸ்தியாம் பிள்ளை மரியம்மா, 2ஆம் இடம் திருமதி வேலாயுதம் பரமேஸ்வரி, 3ஆம் இடம் செல்வி சுப்பையாவைந்திமாலா. பெண்களுக்கான நீர் நிரப்பதல் 1ஆம் இடம் திருமதி பத்திநாதன் பிலோமினா, 2ஆம் இடம் திருமதி ஆ.மதுரை மீனாட்சி, 2ஆம் இடம் திருமதி பசுமதி பூமணி

ஆண், பெண் இருபாலருக்குமான சங்கீதக் கதிரையில் 3 பரிசுகளையும் ஆண்கள் மட்டுமே பெற்றனர். 1ஆம் இடம் விநாயகமூர்த்தி தங்கவேலாயுதம், 2ஆம் இடம் இராமசாமி தாமோதரம்பிள்ளை, 3ஆம் இடம் நாகமணி மகேந்திரன் இவர்களுக்குரிய பரிசில்கள் 24.10.2016 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெற உள்ள மாகாண முதியோர் தின விழாவில் வைத்து வழங்கப்படவுள்ளது.

12

13

Related posts: