முதல் இடத்தை இழந்தது இந்திய அணி!

Sunday, October 22nd, 2017

வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியதன் மூலம் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி தென்ஆப்பிரிக்கா மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் தென்ஆப்பிரிக்கா முதல் இடத்தில் இருந்தது. அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 4-1 எனக் கைப்பற்றியது.இதன்மூலம் முதல் இடத்தில் இருந்த தென்ஆப்பிரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதல் இடத்தை பிடித்தது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் பார்ல் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி, 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதையடுத்து வங்கதேசத்து எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற முன்னிலை வகிப்பதுடன், தொடரை கைப்பற்றியுள்ளதால், ஒருநாள் போட்டிக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Related posts: