மின்சாரம் தாக்கி மல்யுத்த வீரர் பலி!
Friday, August 11th, 2017
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின்கசிவு ஏற்பட்டு தேசிய மல்யுத்த வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் உள்ள மைதானத்தில் தேசிய மல்யுத்த வீரர் விஷால் குமார் வர்மா (25) பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
மைதானத்தில் உள்ள கட்டடங்களில் ஏற்பட்ட மின் கசிவு ஏற்பட்டதால் மின்சாரம் தாக்கி இவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டமானது என ஜார்க்கண்ட் மல்யுத்த சங்கத்தின் தலைவர் போலாநாத் சிங் தெரிவித்தார்.
மேலும், வீரரின் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக அளிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பாகிஸ்தானுக்கு தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
சொன்னதை செய்து காட்டிய டிவில்லியர்ஸ்!
லடாக் தாக்குதலின் எதிரொலி : IPL அனுசரணை ஒப்பந்தங்களை மீளாய்வு செய்யும் நிர்வாகம்!
|
|