மான்செஸ்டர் தாக்குதல் – சாம்பியன்ஸ் கிரிக்கெற் போட்டித் தொடர் பாதிப்பு?

Wednesday, May 24th, 2017

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இடம்பெற்ற தற்கொலை வெடிகுண்டு தாக்குதலானது எதிர்வரும் நாட்களில் ஆரம்பமாக உள்ள சாம்பியன் கிண்ண ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவுகளில் சாம்பியன்ஸ் உலகக் கிண்ணப் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது.

தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டித் தொடரின் பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.போட்டித் தொடரின் பாதுகாப்புப் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை மற்றும் ஏனைய தரப்புக்களுடன் இணைந்து செயற்பட உள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் முக்கிய அணிகள் அனைத்தும் இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது. மான்செஸ்டரில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் 22 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன் 59க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

Related posts: