மந்திர சக்தியால் வென்றோம்: சர்ச்சையை கிளப்பும் தினேஸ் சந்திமால்!

Thursday, November 2nd, 2017

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றது மந்திர சக்தியின் துணையுடனேயே என்று அணித் தலைவர் தினேஸ் சந்திமால் கூறியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். அரபு ராச்சியத்தில் தமது நண்பர் ஒருவரின் தாயாரான மந்திரவாதி ஒருவரிடம் தாம் ஆசிர்வாதம் பெற்றதாகவும், அதனாலேயே இந்த போட்டிகளில் வெற்றி பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்

எவ்வளவு திறைமை இருந்தாலும், இவ்வாறான மந்திர சக்தியின் துணை இன்றி எதனையும் சாதிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

தினேஸ் சந்திமாலின் இந்த கருத்து தொடர்பில், சமுக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

Related posts: