மகளிருக்கான பில்லி ஜீன் கிங் வெற்றிக் கிண்ண டென்னிஸ் போட்டிகள் கோலாலம்பூரில் நாளை ஆரம்பம்!

Sunday, July 23rd, 2023

மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் நாளையதினம் ஆரம்பமாகும் மகளிருக்கான பில்லி ஜீன் கிங் வெற்றிக் கிண்ண டென்னிஸ் போட்டிகளில் இலங்கை வீராங்கனைகளும் பங்கேற்கவுள்ளனர்.

இந்த போட்டிகளில் மலேஷியா, இலங்கை, பாகிஸ்தான், சிங்கப்பூர், நியூசிலாந்து, சீனா, இந்தோனேஷியா, ஹொங்கொங் உள்ளிட்ட பல நாடுகள் பங்குகொள்கின்றன.

அமெரிக்காவின் தலை சிறந்த முன்னாள் வீரரான பில்லி ஜீன் கிங் இனை கௌரவிக்கும் விதமாக இந்த டென்னிஸ் தொடர் இடம்பெறுகின்றது.

அவர் 12 ஒற்றையர் போட்டிகள் உட்பட 39 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் சாம்பியன் கிண்ணத்தை பெற்றுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறும் ஆடவருக்கான டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டிகளில் 8 நாடுகள் பங்கு கொள்கின்றன.

இலங்கை உட்பட கம்போடியா, ஈரான், மலேஷியா, ஜோர்தான், பசுபிக் ஓசானியா, சவுதி அரேபியா மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகள் பங்குகொள்ளும் இந்த டென்னிஸ் தொடர் இலங்கை டென்னிஸ் சங்கத்தின் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: