பி.வி.சிந்து தோல்வி!

Saturday, September 23rd, 2017

டோக்கியோவில் நடைபெறும் ஜப்பான் ஓப்பன் சூப்பர் தொடர் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பெண்கள் பிரிவில் பி.வி சிந்து மற்றும் சாய்னா மேவால் ஆகியோல் தோல்வியடைந்தனர்.

இவர்களின் தோல்வி எதிர்பாராத ஒன்றென விளையாட்டு ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

அத்துடன் இன்று இடம்பெற்ற காலிறுதிப் போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்த் விக்டர் அக்சென்சென்னை எதிர்கொண்டு, 21-17, 21-17 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

அதேவேளை, சீனாவின் ஷீ யூகீ யை எதிர்கொண்ட எச் எஸ் பிரனாயும் நேர் செட் கண்கில் தோல்வியடைந்தார்.

இந்த நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவில் பிரனாவ் ஜெரி சோப்ர, என். சிக்கீர் ரெட்டி ஜோடி 21-18, 9-21, 21-19 என்ற செட்கணக்கில் யூகிம் ஹா செயுங் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

Related posts: