பாக்.–மே.தீ.வுகள் தொடர் இலங்கையில் !
Monday, May 16th, 2016மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான தொடர் ஒன்றை இலங்கையில் நடத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானில் நிலவுகின்ற பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக சர்வதேச கிரிக்கெட் அணிகள் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவதற்கு அச்சம் தெரிவித்துவருகின்றன. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தான் அணி தொடர்களை நடத்திவருகிறது. எனினும் அங்கு போட்டிகளை நடத்துவதால் ஈட்டப்படுகின்ற வருமானம் போதா நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அளவில் மேற்கிந்தியத் தீவுகளுடனான கிரிக்கெட் தொடரை நடத்துவது குறித்து ஆராயப்படுவதாக கூறப்படுகிறது.
Related posts:
|
|