பதவியை துறந்தார் தோனி!
Thursday, January 5th, 2017
இந்திய கிரிக்கட் அணியின் தலைவர் மஹேந்திரசிங் தோனி சர்வதேச ஒரு நாள் மற்றும் சர்வதேச 20க்கு 20போட்டிகளின் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக அந்தப்போட்டிகளுக்கான அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக்கு தெரியப்படுத்தியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20க்கு 20 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையிலேயே தோனியின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் தாம் பங்கேற்கவுள்ளதாக அவர் விருப்பம் வெளியிட்டுள்ளார். மேலும் தமது முடிவுக்கான காரணத்தை தோனி அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|