நான்தான் உலகின் அதிவேக மனிதன் – உசேன் போல்ட்!

Friday, August 4th, 2017

தற்போதும் உலகின் அதிவேக மனிதன் தானே என குறுந்தூர ஓட்டத்தில் அசைக்க முடியாத வீரராக வலம்வரும் ஜமைக்காவின் உசேன் போல்ட் கூறியுள்ளார்.

இலண்டனில் முதல் நடைபெறவுள்ள உலக சம்பியன்ஸிப் மெய்வல்லுனர் தொடர் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“இப்போதும் உலகின் அதிவேக மனிதன் நான்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனது சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது என்று நம்புகிறேன். எனது குழந்தைகள் 20 வயதை எட்டும் போது, இப்போதும் நான் உலகின் சிறந்த ஓட்டப்பந்தய வீரர் என்று அவர்களிடம் பெருமையோடு கூற விரும்புகிறேன்” என கூறினார்.

ஒலிம்பிக்கில் 8 தங்கம் வென்றவரான 30 வயதான உசேன் போல்ட் 100 மீட்டர் ஓட்டத்திலும் (9.58 வினாடி), 200 மீட்டர் ஓட்டத்திலும் (19.19 வினாடி) உலக சாதனையாளராக வலம் வருகிறார்.நடைபெறவுள்ள உலக தடகள போட்டியுடன் அவர் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: