நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது போர்த்துக்கல்!

Tuesday, June 26th, 2018

உலகக் கிண்ணத் தொடரில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்த்துகல் 1:1 என ஈரானுக்கு எதிராக சமநிலையில் ஆட்டத்தை முடித்தாலும் நாக் அவுட் சுற்று முன்னேறியுள்ளது.
பி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் ஈரான் 1:0 என மொராக்கோவை வென்றது. ரொனால்டோவின் போர்த்துகல் மற்றும் ஸ்பெயின் ஆட்டம் 3:3 என சமநிலையில்முடிவுற்றது.
அதற்கடுத்து போர்த்துகல் 1:0 என மொராக்கோவை வென்றது. ஸ்பெயின் 1:0 என ஈரானை வென்றது.
தற்போதைய நிலையில் ஸ்பெயின் மற்றும் போர்த்துகல் தலா 4 புள்ளிகளுடனும் ஈரான் 3 புள்ளிகளுடனும் உள்ளன. இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்த மொராக்கோ முதல் சுற்றுடன் வெளியேறுகிறது.
இதுவரை நடந்த இரண்டு ஆட்டங்களிலும் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனிமனிதனாக போர்த்துகல் அணியை தாங்கிப் பிடித்துள்ளார்.
இந்த உலகக் கிண்ணம் தொடரில் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, பிரேசிலின் நெய்மர், எகிப்தின் மொகம்மது சலா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றிய நிலையில், போர்த்துக்கலின் ரொனால்டோ கலக்கிவருகிறார். இதுவரை 4 கோல்களை அடித்துள்ளார்.
இந்த ஆட்டத்தின் 45வது நிமிடத்தில் ரிகார்டோ குவேரெஸ்மா கோல் அடிக்க போர்த்துக்கல் முன்னிலை பெற்றது.
93வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஈரானின் அன்சார்பிராட் கோலடித்து சமநிலையை உருவாக்கினார்.
இறுதியில் ஆட்டம் 1:1 என சமநிலையானது. 5 புள்ளிகள் பெற்ற போர்த்துக்கல் பி பிரிவில் இருந்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

Related posts: