நவம்பர் 17ஆம் திகதி ஹபீஸுக்குச் சோதனை!
Thursday, November 10th, 2016
பந்தை எறிவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, பந்துவீசத் தடை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் மொஹமட் ஹபீஸ், தனது பந்துவீச்சு முறையை, நவம்பர் 17ஆம் திகதி சோதிக்கவுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் பிறிஸ்பேணில், அவர் இவ்வாறு தனது பந்துவீச்சுப் பற்றிய சோதனைக்கு உள்ளாகவுள்ளார்.
அவரது பந்துவீச்சுப் பற்றிய சோதனை, லோபொரோவிலும் கார்டிஃபிலும் மேற்கொள்ளப்படுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், சோதனை பற்றிய அறிக்கைகள் கிடைப்பதற்குத் தாமதாகும் என்பதால், பிறிஸ்பேண் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி பங்குபற்றவுள்ள தொடருக்கு முன்னதாக, அவ்வறிக்கை கிடைக்குமென எதிர்பார்த்தே, பிறிஸ்பேண் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.ஹபீஸின் பந்துவீச்சு, 2015ஆம் ஆண்டு ஜூலையில், தடை செய்யப்பட்டிருந்தது.
Related posts:
கிண்ணத்தை தனதாக்கியது வவுனியா இந்துக் கல்லூரி!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பீட்டர் சிடில் ஓய்வு!
உலகக் கிண்ண தொடர் குறித்து எந்தவொரு பதற்றமும் கிடையாது - இந்திய கிரிக்கட் அணித் தலைவர் ரோஹித் சர்மா ...
|
|