தோல்விக்கு முடிவுகட்டி வெற்றி பெறவிரும்புகிறோம் – ஸ்மித்!
Friday, February 24th, 2017இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் மூலம், தோல்விப்பயணத்திற்கு முடிவுகட்டி வெற்றிபெற விரும்புகிறோம் என அவுஸ்ரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சமீபகாலமாக டெஸ்ட் தொடரை இழந்து கடும் விமர்சனத்துக்குள்ளான அவுஸ்ரேலிய அணி, இத்தொடரில் சாதிக்க வேண்டுமென்ற ஆவலுடன் உள்ளது. இதுகுறித்து அவுஸ்ரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில்,
அவுஸ்ரேலியா சிறப்பாக விளையாடினால் 0-3 என்ற கணக்கில் தோற்கும். இல்லாவிட்டால் 0-4 என்ற கணக்கில் தொடரை முழுமையாக இழக்கும்’ என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் கூறியிருப்பதுபற்றி கேட்கிறீர்கள். ஒவ்வொரு வரும்தங்களது கருத்தை சொல்லலாம். இவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை.
இந்த அவுஸ்ரேலியா அணி இந்தியாவுக்குகடும் போட்டிகொடுக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. இந்திய அணி சமீபகாலமாக அதுவும் உள்ளூரில் அற்புதமாக விளையாடி இருக்கிறது. எனவே இந்த தொடர்கடினமாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் இங்குள்ள சூழலில் எங்களது வீரர்களால் நல்ல சவால் அளிக்க முடியும்.
இந்த தொடரில் எங்களை சாதாரண அணியாக கருதுவதாக நினைக்கிறேன். ஹர்பஜன்சிங் கூட அவுஸ்ரேலியா 0-4 என்ற கணக்கில் தோற்கும் என்று கூறியிருக்கிறார். எங்களை பொறுத்தவரை இந்தியாவுக்கு ஈடுகொடுத்து விளையாட வேண்டும். இங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்பமாற்றிக் கொண்டு, திட்டங்களை கச்சிதமாக செயல்படுத்தி, கடினமான கட்டத்தில் போராடி மீண்டுவர வேண்டும். இதைத்தான் எங்களது வீரர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.
ஆசிய கண்டத்தில் நாங்கள் தொடர்ச்சியாக 9 டெஸ்டில் தோற்று இருக்கிறோம். இதுஎங்களுக்கு சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை தருகிறது. மிகச்சிறந்த முறையில் விளையாட முயற்சிப்போம். எனகூறினார்.
Related posts:
|
|