தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி: தொடரை வெற்றது இலங்கை!
Thursday, January 26th, 2017
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இறுதி இருபது 20 போட்டியில் சீக்குகே பிரசன்னவின் அதிரடியால் வெற்றி பெற்ற இலங்கை அணி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட இருபது20 தொடரையும் கைப்பற்றியது.
நேற்றையதினம் கேப்டவுனில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
நிதானமாக துடுப்பெடுத்தாடிய நிரோசன் டிக்வெல 68 ஓட்டங்களையும் அதிரடியாக துப்பெடுத்தாடிய சீக்குகே பிரசன்ன 37 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தனர்

Related posts:
ஐ.சி.சி சிறந்த கிரிக்கெட் வீரர் விருது பெறுவதில் மகிழ்ச்சியே -அஷ்வின்!
யாழ்.இந்து மகளிர் இறுதிக்குத் தகுதி!
ஹாட்ரிக் சாதனை படைத்த கோஹ்லி!
|
|
|


