தேசியமட்ட பளுதூக்கல் ஆசிகா மூன்று சாதனை!
Monday, June 25th, 2018
பொலனறுவையில் நடைபெற்றுவரும் தேசியமட்ட பளுதூக்கல் போட்டியில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்த வி.ஆசிகா மூன்று சாதனைகளைப் படைத்தார்.
44 ஆவது தேசிய மட்ட பளுதூக்கல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஆசிகா 63 கிலோ எடைப்பிரிவில் சினெச் முறைப் போட்டியில் 76 கிலோ பளுவையும் கிளீக் அன்ட் ஜக் முறையில் 97 கிலோ பளுவையும் ஒட்டுமொத்தமாக 173 கிலோ பளுவையும் தூக்கி தங்கப் பதக்கம் வென்றார்.
இந்த மூன்றும் அவரால் படைக்கப்பட்ட புதிய சாதனைகளாக அமைந்துள்ளன.
Related posts:
ஆர்னல்ட் பாமர் காலமானார்!
டெஸ்ட் புதிய தரவரிசையில் 2வது இடத்தில் யூனுஸ்!
சிறிலங்கா கிரிக்கெட் பிரிவு 111 பரீஸ் அணி 151 ஓட்டங்களால் வெற்றி!
|
|