டோனியைப் போல் செயற்பட விரும்புகிறேன் – சஹா!

Sunday, August 13th, 2017

இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும், தலைச்சிறந்த விக்கட் காப்பாளருமான டோனியைப் போல், அமைதியாக இருக்க ஆசைப்படுவதாக, இந்திய டெஸ்ட் அணியின் விக்கட்காப்பாளர் விருத்திமான் சஹா கூறியுள்ளார்.

போட்டிகளில் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் விக்கட் காப்பாளர்களின் பங்களிப்பு என்பது மிக முக்கியமானதாக அமைகின்றதுஎதிரணி வீரர்களை  வார்த்தைகளினால் வம்புக்கிழுத்து, அவர்களின் நிதானத்தை குழைத்து, அவர்களை ஆட்டமிழக்கச் செய்யும் யுக்தியை, பல விக்கட் காப்பாளர்கள் கையாண்டு வருகிறார்கள்.

ஆனால், மஹேந்திர சிங் டோனி அதுபோன்று அல்லாது எப்போதும் மைதானத்தில் அமைதியான ஒரு விக்கட் காப்பளராகவே இருந்துள்ளார்எனவே தானும் டோனியைப் போன்று எப்போதும் அமைதியான ஒரு விக்கட் காப்பாளராக இருப்பதற்கே விரும்புவதாக, விருத்திமான் சஹா குறிப்பிட்டுள்ளார்சஹா ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் டோனி போல செயல்பட விரும்புவதாக கூறியுள்ளார்.

Related posts: