சந்திமால் , ஹத்துருசிங்க , குருசிங்கவிற்கு தண்டனை  -ஐ.சி.சி!

Friday, July 13th, 2018

இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமால், பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கு கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அவர்கள் தென்னாபிரிக்கா அணிக்கெதிராக இடம்பெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் பங்குகொள்ள மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தின் தன்மையை மாற்றிய குற்றத்திற்காகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: