கூடைப்பந்தாட்டத்தில் யாழ்ப்பாணம் மகுடம்!

Monday, April 30th, 2018

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் நடத்தப்படும் கூடைப்பந்தாட்டத் தொடரில் ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாண மாவட்ட அணி சம்பியனானது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் கூடைப்பந்தாட்ட திடலில் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் யாழ்;ப்பாண மாவட்ட அணியை எதிர்த்து வவுனியா மாவட்ட அணி மோதியது.

நான்கு கால்பாதிகளைக் கொண்டதாக ஆட்டம் அமைந்தது. முதலாவது கால் பாதியை 22:20 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றியது வவுனியா மாவட்ட அணி.

இரண்டாவது கால் பாதியை 36:10 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றியது யாழ்ப்பாண மாவட்ட அணி. முதல் பாதியின் முடிவில் 56:32 என்ற புள்ளிகளின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்ட அணி முன்னிலை வகித்தது.

மூன்றாவது கால் பாதியாட்டம் 29:13 என்ற புள்ளிகளின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்ட அணியின் வசமானது. நான்காவது கால் பாதியும் 20:12 என்ற புள்ளிகளின் அடிப்படையில் யாழிடம் வீழ்ந்தது. முடிவில் 105:56 என்ற புள்ளிகளின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்ட அணி வெற்றி பெற்றது.

Related posts: