கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்கள் பாவிக்க தடை!

Thursday, February 28th, 2019

இலங்கை தேசிய அணியில் பங்கு கொள்ளும் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்களிலிருந்து தங்களை நீக்கிக் கொண்டால் அழுத்தங்கள் இன்றி விளையாட்டில் பங்குகொள்ளலாம் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் சம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டுக்கு வீரர்களைத் தெரிவு செய்யும் போது ஏற்பட்ட பிரச்சினைகள்தான் கடந்த காலங்களில் கிரிக்கெட்டில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு முக்கிய காரணமாக காணப்பட்டது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: