கிரிக்கெட்டில் புதிய முறையை அறிமுகப்படுத்தும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்!

Tuesday, December 11th, 2018

2018 – 2019 ஆண்டிற்கான அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் நடாத்தும் பிக் பாஷ் இருபதுக்கு -20 லீக் தொடரானது, டிசம்பர் 19ம் திகதி முதல் ஜனவரி மாதம் வரையில் நடைபெறவுள்ளது.

இம்முறை நடைபெறவுள்ள குறித்த கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சி முறைக்கு பதிலாக பிக் பாஷ், துடுப்பாட்ட மட்டையை சுண்டுவதற்கு முடிவு செய்துள்ளது.

மேலும், ஸ்டம்பிற்கு மேல் வைக்கப்படும் பெய்ல்ஸ் (Bails) (மரக்கட்டையால் செய்யப்பட்டது), இதை வித்தியாசமாக காட்டுவதற்காக பிக் பாஷ் தொடரில், பெய்ல்ஸ் மீது பந்து மற்றும் எதாவது தாக்கினால் லைட் எரியும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பின்காலத்தில் சர்வதேச போட்டியிலும் இந்த பெய்ல்ஸ் நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: