கிண்ணம் வென்றது யாழ் பல்கலைக்கழக அணி!

Friday, May 4th, 2018

அரியாலை சனசமூக நிலையம் நடத்திவந்த வலைப்பந்தாட்டத் தொடரில் பெண்கள் பிரிவில் கிண்ணம் வென்றது யாழ்ப்பாணப் பல்கலைக் கழக அணி.

அரியாலை சனசமூக நிலைய வலைப்பந்தாட்டத் திடலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த இறுதியாட்டம் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழக அணியை எதிர்த்து சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி மோதியது.

நான்கு கால் பாதிகளைக் கொண்டதாக ஆட்டம் அமைந்தது. முதலாவது கால் பாதியில் 10:09 என்ற புள்ளிகளின் அடிப்படையில் போராடி வெற்றி பெற்றது சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி.

இரண்டாவது கால் பாதியை 10:08 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றி பதிலடி கொடுத்தது யாழ்ப்பாணப் பல்கலைக் கழக அணி. முதல் பாதியின் முடிவில் 19:18 என்ற புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை வகித்தது யாழ்ப்பாணப் பல்கலைக் கழக அணி.

மூன்றாவது கால் பாதியில் இரண்டு அணிகளும் தலா 10 புள்ளிகளைப் பெற்றன.

நான்காவது கால்பாதியில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக அணி 15 புள்ளிகளையும், சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி 12 புள்ளிகளையும் பெற்றன. முடி வில் 44:40 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று கிண்ணம் வென்றது யாழ்ப் பாணப் பல்கலைக் கழக அணி.

Related posts: