ஓய்வுபெற்ப் போவதில்லை – டு பிளிசிஸ் !

Wednesday, January 22nd, 2020

தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. ஆனால் 2 வது மற்றும் 3 வது டெஸ்டில் படுதோல்வி அடைந்தது.

அணியின் தலைவர் டு பிளிசிஸ் மிகவும் மோசமான ஃபார்மில் உள்ளார். 3 வது டெஸ்டில் 44 ஓட்டங்கள் தான் எடுத்தார். இந்தத் தொடரில் அவரின் சராசரி 20 ஐ விடவும் குறைவு. 24 ஆம் திகதி தொடங்கும் கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும்.

மோசமான தோல்வியால் டு பிளிசிஸ் ஓய்வு பெற இருக்கிறார் என்று செய்திகள் பரவின. இந்நிலையில் டி20 உலக கிண்ணம் வரை அணியில் நீடிப்பேன். அதன்பிறகே ஓய்வு. தற்போது ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று டு பிளிசிஸ் விளக்கம் அளித்துள்ளார்.

Related posts: