ஏமாற்றமடைந்ததாக ஜெயவர்தனே கவலை!

Friday, April 27th, 2018

ஹைதரபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது மிகவும் ஏமாற்றமடைந்ததாக மும்பை அணியின் பயிற்சியாளர் ஜெயவர்தனே கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட மும்பை தற்போது வரை விளையாடியுள்ள போட்டிகளில் 1 வெற்றி 5 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இனி வரும் அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே மும்பை அணியின் பிளே ஆப் சுற்றை நினைத்து கூட பார்க்க முடியும்.

இந்நிலையில் மும்பை அணியின் பயிற்சியாளரும், இலங்கை அணியின் முன்னாள் வீரருமான ஜெயவர்தனே ஹைதரபாத் அணி நிர்ணயித்த எளிய ஓட்டங்களை கூட எட்ட முடியவில்லை என்ற போது மிகவும் ஏமாற்றமடைந்தேன், இதில் துடுப்பாட்ட வீரர்களையே நான் குற்றம் சொல்வேன்.

அதுமட்டுமின்றி அணியில் இருக்கும் இளம் வீரர்கள் ஹார்திக் பாண்ட்யா உட்பட அனைவரும் கடுமையான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் அப்போது தான் ஒரு நிலையான கிரிக்கெட் வீரராக உருவாக முடியும் என்று கூறியுள்ளார்.

Related posts: