உலகக் கிண்ண சூப்பர் லீக் அதிகாரபூர்வ அறிவிப்பு!

Tuesday, July 28th, 2020

உலகக் கிண்ண சூப்பர் லீக்கை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்துள்ளது சர்வதேச கிரிக்கெட் சபை.

ஜூலை 30 முதல் இங்கிலாந்து – அயர்லாந்து அணிகளுக்கிடையே இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடர், சூப்பர் லீக்கின் முதல் தொடராக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 இல் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டிக்கான தகுதிச் சுற்றாக இது கருதப்படும். உலகக் கிண்ண சூப்பர் லீக்கில் 12 முழு உறுப்பினர்களும் நெதர்லாந்தும் பங்கேற்கின்றன.

அனைத்து அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட நான்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஒருநாள் தொடர்களில் பங்கேற்கும்.

இதில் முதல் ஏழு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2023 உலகக் கிண்ண போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும். போட்டியை நடத்தும் நாடு என்பதால் இந்தியா, தானாகத் தகுதியடைந்துள்ளது. ஆக, 8 அணிகள் இதிலிருந்து தேர்வாகிவிடும்.

நேரடியாகத் தகுதி பெறாத அணிகள், 5 அசோசியேட் அணிகளுடன் இணைந்து தகுதிச்சுற்றுப் போட்டியில் பங்கேற்கும். இதிலிருந்து 2 அணிகள் தேர்வாகும். 2023 உலகக் கிண்ண போட்டியில் 10 அணிகள் பங்கேற்கவுள்ளன.

Related posts: