உலகக் கிண்ண கால்ப்பந்து: முயன்றால் முடியாதது இல்லை – ரொனால்டோ!

Saturday, June 9th, 2018

உலக கிண்ணத்தை வெல்லும் அணிகளுக்கான பந்தயத்தில் நாம் இல்லை என்ற உண்மை தெரியும். ஆனால் கால்பந்தில் முயன்றால் முடியாதது இல்லை என ரொனால்டோ தெரிவித்தார்.

கால்பந்தில் சிறந்த வீரருக்கான “பிபா” விருதை ஐந்துமுறை வென்றவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (வயது 33).

அதேநேரம் இவரது போர்த்துக்கல் அணி இதுவரை ஒரு முறை கூட உலகக்கிண்ணம் வென்றது இல்லை. 1966 இல் 3 ஆவது இடம் பிடித்ததே அதிகம்.

கடந்த முறை லீக் சுற்றுடன் திரும்பியது. தற்போது “பி” பிரிவில் உள்ள இந்த அணி முதல் போட்டியில் வலிமையான ஸ்பெயினை (ஜீன் 15) சந்திக்கின்றது. உலகக்கிண்ணத் தொடருக்காக ர~;யா புறப்பட்டபோது ரொனால்டோ கூறியதாவது:

போர்த்துக்கல் அணி வீரர்களுக்கு உலகக்கிண்ணத் தொடரில் சாதிக்க வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியம் இருக்கும் என்பது உறுதி. அதேநேரம் கிண்ணம் வெல்லும் போட்டியில் நாம் இல்லை என தெரியும். இதுதான் உண்மை. ஆனால் கால்பந்தை பொறுத்தவரையில் முயன்றால் முடியாதது இல்லை.

ஒவ்வொரு போட்டிக்கும் திட்டமிட்டு செயல்பட வேண்டும். ஸ்பெயினுக்கு எதிரான முதல் போட்டி மிகவும் கடினமானது. இருப்பினும் முடிந்தவரை சிறப்பாக செயல்பட முயற்சிப்போம். இதைத்தான் 2016 யூரோ கிண்ணத் தொடரில் செய்து முதல் கிண்ணத்தை கைப்பற்றினோம்.

நம்பிக்கை வைத்து கடைசிவரை போராடினால் கால்பந்தில் எது வேண்டுமானாலும் சாதிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts: