உசைன் போல்ட் ஒய்வு பெறுவது உறுதி!
Thursday, February 16th, 2017கடந்த 2008ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றதன் மூலம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த ஜமைக்காவின் உசைன் போல்ட், ஒய்வு பெறுவதை உறுதிபடுத்தியுள்ளார்.
ஓய்வு பெறுவது குறித்து முன்னதாகவே தீர்மானித்திருந்தாலும், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு அமைய, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் லண்டனில் நடைபெறும் சர்வதேச தடகள போட்டிகளுடன் ஒய்வுப்பெற போவதாக அவர் அறிவித்துள்ளார்.
மேலும் தனது முடிவில் மாற்றம் இல்லை எனவும் தான் இந்த துறையில் நிறைய சாதித்து விட்டதால்; ஓய்வு பெறுவது குறித்து கவலை கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்
Related posts:
விளையாட்டு அரங்கினுள் பெண்கள் நுழைய சவுதி அனுமதி!
அஹமட் செஷாட் மீண்டும் இணைப்பு!
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தொடர் குருநகர் பாடும்மீன் கழகம் இறுதிக்குச் சென்றது!
|
|