இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி தொடர்பில் அரவிந்த!

Friday, August 11th, 2017

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகள், இரண்டு அணிகளுக்கும் இடையிலான பொருத்தப்பாடின்மையை வெளிப்படுத்துவதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்தடி சில்வா தெரிவித்துள்ளார்.

 இந்திய கிரிக்கட் அணி, அதன் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக் கொண்டுள்ள மிகப்பெரிய நிதி வளத்தின் பின்னணியில் செயற்படுகிறது

அத்துடன் ஐ.பி.எல். தொடர் மூலம் இந்திய அணியின் வீரர்கள் மிகச் சிறந்த அனுபவங்களைப் பெற்றவர்களாக இருக்கின்றனவர். இந்த தொடர் உலகின் தலைசிறந்த பயிற்சியாளர்களை இந்திய அணிக்கு ஒரே இடத்தில் வழங்குவதுடன், முக்கியமான பல வீரர்களுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பையும் இந்திய அணியின் இளைஞர்களுக்கு வழங்குகிறது

இவ்வாறான நிலையில் மிகவும் பலம்பொருந்திய இந்திய அணியுடன் இலங்கை விளையாடுவது மிகவும் சவால்மிக்கதும், போட்டித்தன்மை வாய்ந்ததாகவும் அமைந்திருப்பதாக அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts: